வாகரையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுவருகின்றது.


இதன்கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வாகரை,ஆண்டான்குளம் பிரதேச மக்களுக்கு இன்று திங்கட்கிழமை காலை உணர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இப்பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கே.குகன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்,செயலாளர் அண்ணாத்துரை உட்பட கட்சியின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டுவருவதாகவும் கட்சி உறுப்பினர் குகன் தெரிவித்தார்.