சிவானந்தா தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை

மட்டக்களப்பு,கல்லடி,உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை (14.11.2015) நடைபெற இருக்கின்றது.

பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் சுவாமி நடராஜானந்தா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறும் இவ்விழாவிற்கு கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கே.துரைராசசிங்கம் பிரதம அதிதியாகவும் மாகாண கல்விப் பணிப்பாளர் (கிழக்கு), எம்.ரி.ஏ நிசாம் கௌரவ அதிதியாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர் சங்க பிரித்தானியக் கிளையின் செயலாளார் ரி.சுந்தரராஜா ஆகியோர் விசே அதிதிகளாகவும் மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சுகுமாரன் அழைப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.