மண்முனை வடக்கு பிரதேச சிரேஷ்ட பிரஜைகளுக்கான இலவச மருத்துவ முகாம்



 ( லியோ)    

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்பின் ஒன்றியம்  ஏற்பாட்டில்  எகெட் கரிதாஸ் நிறுவன அனுசரணையில் இலவச மருத்துவ முகாம் இன்று  இடம்பெற்றது .

மண்முனை  வடக்கு பிரதேச செயலக  பிரிவின் 48 கிளை அங்கத்தவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்  சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்பின் ஒன்றியத்தின்  தலைவர்  எஸ் . பாலசுப்பிரமணியம் தலைமையில்  ஹெல்ப் ஏஜ் ஸ்ரீ லங்கா நடமாடும் கண் வைத்திய பிரிவினால் இன்று  மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடத்தப்பட்டது

இன்று  இடம்பெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான   இலவச  மருத்துவ முகாமில்   கண் மற்றும் உடல் பரிசோதனைகள்  இடம்பெற்றதுஇதன் போது நோய் தொடர்பாக இனம் காணப்பட்டவர்களுக்கு  இலவசமாக  ஆலோசனைகளும்  நோய்க்கான   மருந்துகள் வழங்கப்பட்டது  .

  கண்  தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்று     தேவையானவர்களுக்கு   இலவச மூக்குகன்னாடிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .  

இந்த இலவச  மருத்துவ முகாம்   நவம்பர் 13ஆம் திகதி  முதல்     நவம்பர்  15 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு  இடம்பெறவுள்ளது  .

இடம்பெற்ற  இலவச மருத்துவ முகாம் நிகழ்வில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா , எகெட் நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பொது வைத்தியர் திருமதி  தமிழ்வாணன் கஜமுகி , சமூக சேவை உத்தியோகத்தர் பி .திருச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர் .