( லியோ)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலக சிரேஷ்ட
பிரஜைகளின் அமைப்பின் ஒன்றியம் ஏற்பாட்டில் எகெட் கரிதாஸ் நிறுவன
அனுசரணையில் இலவச மருத்துவ முகாம் இன்று இடம்பெற்றது .
மண்முனை
வடக்கு பிரதேச செயலக
பிரிவின் 48 கிளை அங்கத்தவர்களுக்கான இலவச
மருத்துவ முகாம் சிரேஷ்ட பிரஜைகளின் அமைப்பின் ஒன்றியத்தின் தலைவர்
எஸ் . பாலசுப்பிரமணியம் தலைமையில் ஹெல்ப் ஏஜ் ஸ்ரீ
லங்கா நடமாடும் கண்
வைத்திய பிரிவினால் இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடத்தப்பட்டது .
இன்று இடம்பெற்ற சிரேஷ்ட பிரஜைகளுக்கான இலவச
மருத்துவ முகாமில் கண் மற்றும்
உடல் பரிசோதனைகள் இடம்பெற்றது .
இதன் போது நோய்
தொடர்பாக இனம் காணப்பட்டவர்களுக்கு இலவசமாக ஆலோசனைகளும்
நோய்க்கான மருந்துகள் வழங்கப்பட்டது .
கண் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்று தேவையானவர்களுக்கு இலவச மூக்குகன்னாடிகள் வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது .
இந்த இலவச மருத்துவ முகாம் நவம்பர் 13ஆம் திகதி
முதல்
நவம்பர் 15 ஆம் திகதி வரை
மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது .
இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்
நிகழ்வில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு
பிரதேச செயலாளர் வி
.தவராசா , எகெட் நிறுவன
இயக்குனர் அருட்தந்தை ஜெரோம்
டிலிமா ,மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை பொது வைத்தியர் திருமதி
தமிழ்வாணன் கஜமுகி , சமூக
சேவை உத்தியோகத்தர் பி .திருச்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர் .