மின்னல் தாக்கி பள்ளிவாசல் சேதம் -ஏறாவூரில் சம்பவம்

மட்டக்களப்பு,ஏறாவூர் சத்தாம் ஹ{ஸைன் கிராம சத்தாம் ஹ{ஸைன் பள்ளி வாசல் வளாகத்தில் மின்னல் தாக்கி சேதமேற்பட்டுள்ளதாக பள்ளி வாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.


சனிக்கிழமை பகல் இடி முழக்கத்துடன் பலத்த மழையும் மின்னலும் காணப்பட்டது. இவ்வேளையிலேயே மின்னல் மேற்படி சத்தாம் ஹ{ஸைன் பள்ளி வாசலின் வளாகத்தையும் தாக்கியது.

இதனால் மின்சார பல்புகள், மின் மானி, மற்றும் கட்டிடம் என்பனவற்றுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

மின்னல் தாக்கும்போது பள்ளி வாசலில் எவரும் இருந்திருக்கவில்லை என்று பள்ளி வாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.