மட்டக்களப்பு வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள்

 ( லியோன் )  மட்டக்களப்பு மாவட்டத்தில்  கரித்தாஸ் எகெட்  நிறுவகம் நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை அபிவிருத்தி செய்யும் நோக்கில்   மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டி நிகழ்ச்சிகளை செயல்படுத்தி வருகின்றது .

இதன் கீழ்  மட்டக்களப்பு  வலய பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட பாடசாலை  மாணவர்களுக்கிடையிலான ஆங்கில மொழித்திறன் போட்டிகள் கரித்தாஸ் எகெட்  நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜெரோம் டிலிமா தலைமையில்  இன்று மட்டக்களப்பு சார்ள்ஸ்  மண்டபத்தில் இடம்பெற்றது .   

 இப்போட்டிகள்  டயக்கோஸியா நிறுவன நிதி உதவியுடன்   கரித்தாஸ் எகெட்  நிறுவகம் மட்டக்களப்பு மாவட்டத்தில்  பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தி வருகின்றது .. 

இன்று இடம்பெற்ற போட்டிகளில்  மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட   13  பாடசாலை மாணவர்கள்  கலந்துகொண்டனர்  .

இந்நிகழ்வில்  டயக்கோஸியா நிறுவன திட்ட உத்தியோகத்தர் . பி. . செல்லத்துரை , நிறுவன திட்ட ஊக்கு விப்பாளர்கள்பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.