நல்லாட்சியின் எடுத்துக்காட்டாக தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை சென்றுபார்வையிட்டார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாக இன்று புதன்கிழமையும் நடைபெற்றுவருகின்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆரம்ப நாளில் 09பேர் இணைந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் 13பேர் இணைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்குமாறு கோரியே இலங்கையில் உள்ள சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இன்று புதன்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சென்றுபார்வையிட்டார்.
இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
“நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகி தமது குடும்பத்தினருடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதுகின்றனர்.
எய்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும்போது அம்புகள் இங்கு அடைபட்டுக்கிடக்கின்றோம் என மனவருத்தத்துடன் கூறினார்கள்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏழு குடும்பஸ்தர்கள் உள்ளனர்.அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெரும் அவலுடன் உள்ளனர்.அத்துடன் பிள்ளைகளுக்கு சரியான கல்வியை வழிகாட்டியவர்கள் கூட அங்கு உள்ளனர்.
இவ்வாறு உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலைசெய்யப்படவேண்டும்.அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ளவேண்டும்.தங்களை யாரும் கவனிப்பதில்லையென்ற ஆதங்கமும் அவர்களிடம் உள்ளது.
தற்போது ஒரு நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது,நல்லாட்சியின் கீழ் ஜனாதிபதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொண்;டுவரும்வேளையில் அதன் அடையாளமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறை பிடிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சிறந்த ஒரு முடிவினை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திவருகின்ற செய்தியை சிறைக்கைதிகளிடம் தெரிவித்தேன்.
பொது மன்னிப்பு அடிப்படையிலோ வேறு வழிகளிலோ சிறைகைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.
அற்பசொற்ப விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு நாங்கள் அடைக்கப்பட்டுள்ளோம்.விரைவில் விடுதலைபெற்று ஒரு ஜனநாயக சூழலில் வாழ்க்கையை நடாத்தவேண்டும் என்பதில் பெரும் அக்கரையாகவுள்ளனர்.
தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் அக்கரையாகவுள்ளனர்.அவர்கள் விடுதலைபெற்றுசெல்லும்போது தவறுகள் செய்யாமல் சமூகத்தில் வாழ்வார்கள் என்பது அவர்களின் கருத்துகள் மூலம் தென்படுகின்றது.
நல்லாட்சியின் எடுத்துக்காட்டாக அவர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும்.”என்றார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை பாராளுமன்ற உறுப்பினர் இன்று காலை சென்றுபார்வையிட்டார்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாக இன்று புதன்கிழமையும் நடைபெற்றுவருகின்றது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஆரம்ப நாளில் 09பேர் இணைந்திருந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடக்கம் 13பேர் இணைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மை விசாரணைகளை துரிதப்படுத்தி விடுதலைசெய்ய நடவடிக்கையெடுக்குமாறு கோரியே இலங்கையில் உள்ள சிறைக்கைதிகள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளை கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரசன்னா இந்திரகுமார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இன்று புதன்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சென்றுபார்வையிட்டார்.
இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
“நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகி தமது குடும்பத்தினருடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்று கருதுகின்றனர்.
எய்தவர்கள் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கும்போது அம்புகள் இங்கு அடைபட்டுக்கிடக்கின்றோம் என மனவருத்தத்துடன் கூறினார்கள்.
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஏழு குடும்பஸ்தர்கள் உள்ளனர்.அவர்கள் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் பெரும் அவலுடன் உள்ளனர்.அத்துடன் பிள்ளைகளுக்கு சரியான கல்வியை வழிகாட்டியவர்கள் கூட அங்கு உள்ளனர்.
இவ்வாறு உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலைசெய்யப்படவேண்டும்.அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல்வாதிகள் மேற்கொள்ளவேண்டும்.தங்களை யாரும் கவனிப்பதில்லையென்ற ஆதங்கமும் அவர்களிடம் உள்ளது.
தற்போது ஒரு நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது,நல்லாட்சியின் கீழ் ஜனாதிபதி பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொண்;டுவரும்வேளையில் அதன் அடையாளமாக போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறை பிடிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும் சிறந்த ஒரு முடிவினை எடுக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்திவருகின்ற செய்தியை சிறைக்கைதிகளிடம் தெரிவித்தேன்.
பொது மன்னிப்பு அடிப்படையிலோ வேறு வழிகளிலோ சிறைகைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது.
அற்பசொற்ப விடயங்களுக்காக கைதுசெய்யப்பட்டு நாங்கள் அடைக்கப்பட்டுள்ளோம்.விரைவில் விடுதலைபெற்று ஒரு ஜனநாயக சூழலில் வாழ்க்கையை நடாத்தவேண்டும் என்பதில் பெரும் அக்கரையாகவுள்ளனர்.
தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் அக்கரையாகவுள்ளனர்.அவர்கள் விடுதலைபெற்றுசெல்லும்போது தவறுகள் செய்யாமல் சமூகத்தில் வாழ்வார்கள் என்பது அவர்களின் கருத்துகள் மூலம் தென்படுகின்றது.
நல்லாட்சியின் எடுத்துக்காட்டாக அவர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும்.”என்றார்.

