தாமரைக்கேணி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு தாமரைக்கேணி  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையின் கீழ்  எழுந்தருளியிருக்கும் கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா  15 .10.2015 வியாழக்கிழமை  காலை 07.32  மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் இடம்பெறவுள்ளது .


 இதனை முன்னிட்டு 13.10.2015 செவ்வாக்கிழமை  ஆலயத்தில் அதிகாலை முதல்  வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும்  , கணபதி ஹோமத்துடன் கிரிகைகளும்  இடம்பெற்றதுடன்  இன்று  அதிகாலை சுவாமிகளைப் பிரதிஷ்டை செய்யப்பட்டு  தொடர்ந்து  விக்கிரங்களுக்கு அடியார்களினால் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு   இடம்பெற்று வருகின்றது . இந்நிகழ்வு இன்று மாலை 05.00 மணி வரை இடம்பெறும் .

 நாளை 15 .10.2015   வியாழக்கிழமை காலை 07.32  மணி தொடக்கம் 09.02 மணி வரை உள்ள சுபவேளையில் ஆலய பிரதம குரு சக்தி .கே . குமாரதாசன் தலைமையில்   விசேட கிரிகைகளுடன் ஆரம்பமாகி  வீரகத்தி விநாயகர் வழிபாடுகளும்  , கணபதி ஹோம யாக பூஜைகள் இடம்பெற்று தாமரைக்கேணி  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலையின் கீழ்  எழுந்தருளியிருக்கும் கௌரியம்மன் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா இடம்பெறவுள்ளது.