கழிவுகளை உண்ணவந்த யானை தாக்கி வயோதிபர் பலி –வாழைச்சேனையில் சம்பவம்

கழிவுக் குப்பைகளை உண்ண வந்த காட்டு யானை தாக்கி வயோதிபர் பலியானதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மியான்குளம் கிழக்கு கிராமத்தில் வசிக்கும் முஹைதீன் பாபா முஹம்மது ஹனீபா (வயது 58) என்பவர் ஓட்டமாவடி நகருக்கு வந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது குடிசைக்குத் திரும்பிய சமயம் அங்கு குப்பைக் கழிவுகளை உண்பதற்காக வந்து நின்ற யானை வழியால் சென்று கொண்டிரந்த இந்த முதியவரைத் தாக்கியுள்ளது.

தகவல் அறிந்து உறவினர்களும் அயலவர்களும் ஸ்தலத்திற்குச் சென்ற போது அவர் உயிரிழந்;து காணப்பட்டுள்ளார்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.இச்சம்பவம் பற்றி வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மியான்குளம் கிழக்கு கிராமத்தில் வாழைச்சேனை பிரதேச சபையால் உள்ளுர் திண்மக் கழிவுகள் நீண்டகாலமாக இந்த இடத்தில் கொண்டப்பட்டு வருவதால் அதனை உண்பதற்கு அவ்விடத்திற்கு காட்டு யானைகள் வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.