புனித மிக்கேல் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி மரணம்

(லியோன் )  

மட்டக்களப்பு மறை மாவட்ட புனித வளனார் சிறிய குருமட மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்   .

கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருப்பெருந்துறை பகுதியில் உள்ள நீர் நிரம்பிய கிரவல் குழியில் குளிக்க சென்ற மட்டக்களப்பு மறை மாவட்ட புனித வளனார் சிறிய குருமட மாணவன்  இக்னேசியஸ் ஜூட்றோஜித் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்

உயிரிழந்த   மாணவனின் சடலம்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு  மரணம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசாரினால் மேற்கொண்ட  விசாரணையின் பின் மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

உயிரிழந்த மாணவன்  மட்டக்களப்பு ரெட்ணம் வீதி , ஜெயந்திபுரத்தை சேர்ந்த இக்னேசியஸ் ரூபன் ,  திருமதி .இக்னேசியஸ் ஜீவராணி  ஆகியோரின் மகனும்   மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 11ல் கல்வி பயின்ற மாணவனுமாவார் .

உயிரிழந்த மாணவனின்   இறுதி  நிகழ்வு    இன்று காலை 09.00 மணியளவில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் மட்டக்களப்பு இருதயபுரம் திருஇருதயநாதர்  ஆலயத்தில் திருப்பலியுடன்  இடம்பெற்றதன்   பின் மாணவனின் உடல்  மட்டக்களப்பு கள்ளியங்காடு மயானத்தில்  அடக்கம் செய்யப்பட்டது.