(லியோ )
மட்டக்களப்பு மறை மாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற மறைக்கல்வி மாணவர்களுக்கான
பரீட்சை இன்று மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் நடைபெற்றது
.
மட்டக்களப்பு மறை மாவட்ட
பங்குகளில் இயங்கி வருகின்ற ஞாயிறு
மறைக்கல்வியின்
2015ஆண்டுக்கான
பரீட்சை இன்று மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து பங்குகளிலும் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்தில் நடைபெற்ற மறைக்கல்வி பரீட்சையில் ஆண்டு 02 தொடக்கம் ஆண்டு 11 வரையிலான மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
இவர்களுக்கான பரீட்சை மேற்பார்வையாளர்களாக தன்னாமுனை பங்கு மறை ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .