திருகோணமலை மறை மாவட்ட புதிய ஆயருக்கு மட்டக்களப்பில் மகத்தான வரவேற்பு

( லியோன் )    

திருகோணமலை மறை மாவட்ட புதிய ஆயருக்கு   மட்டக்களப்பு மறை மாவட்டத்தினால்  வரவேற்பு அளிக்கும் நிகழ்வு   ஞாயிறுக்கிழமை மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறை மாவட்ட  ஆயர் இகுருக்கள் இதுறவியர்கள் இபொதுநிலையினர் ஆகியோர் இணைந்து  திருகோணமலை மறை மாவட்டத்தில்  புதிய ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டுள்ள  கலாநிதி  கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகைக்கு  18.10.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது .

இந்நிகழ்வு  மட்டக்களப்பு ஆயர் இல்லத்தில் இருந்து  புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவியர்களின் பேன்ட் வாத்தியம் முழங்க  ஆயரை ஊர்வலமாக மரியாள் பேராலயம் வரை அழைத்து வரப்பட்டனர்   .

அதனை தொடர்ந்து   மரியாள் பேராலயத்தில்  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகையுடன்  திருகோணமலை மறை மாவட்ட புதிய ஆயர்   கலாநிதி  கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் இணைந்து திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .

இடம்பெற்ற விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்ட  குருக்கள்இ துறவியர்கள் இபொதுநிலையினர் ஆகியோர்  கலந்துகொண்டனர் .

திருகோணமலை மறை மாவட்டத்தில்  புதிய ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டு  மட்டக்களப்பு மறை மாவட்டத்திற்கு வருகை தந்த   கலாநிதி  கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் ஆண்டகைக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட பொது நிளையினறினால் நினைவு சின்னக்கள் வழங்கப்பட்டு வாழ்த்துக்களும் தெரிவித்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது