இராமகிருஸ்ண மிசனில் வித்தியாரம்ப நிகழ்வு

நவராத்திரியின் இறுதி தினமான நேற்று வியாழக்கிழமை வித்தியாரம்பம் நாடெங்கிலும் நடைபெற்றது.

தமது செல்வங்களுக்கு கல்வி புகட்டும் ஆரம்ப நாளாக இன்று இந்துக்கள் உட்பட பிறமத மக்களும் அனுஸ்டித்துவருகின்றனர்.

இந்த வித்தியாரம்ப நாளை முன்னிட்டு மட்;டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள்,கல்வி நிலையங்கள்,பாடசாலைகளில் ஏடு திறக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

விசேடமாக மட்டக்களப்பு கல்லடியில் உள்ள இராம கிருஸ்ண மிசனில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இராம கிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ் தலைமையில் மாணவர்களுக்கு வித்தியாரம்ப நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான சிறுவர்கள் கலந்துகொண்டு வித்தியாரம்பம் செய்தனர்.