
மேற்படி தம்பதியான இருவரினதும் கொலை தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததன் பிரகாரம் பிரசாந்தன் வியாழக்கிழமை இரவு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தோடு தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரான பிரசாந்தனின் சொந்த சகோதரன் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரீ-56 ரகத் துப்பாக்கியாலேயே இந்த ஆசிரியத் தம்பதியினர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.