தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு



தேசிய   உணவு உற்பத்தி  வேலைத்திட்டத்தின்  ஆரம்ப நிகழ்வு  ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின்  இரணமடு , வட்டக்கச்சி  பகுதியில்  05 .10 .2015 காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது  .

அதனுடன் இணைந்ததாக   மட்டக்களப்பு மாவட்ட   பிரதேச செயலக மட்டங்களிலும்  காலை  10.00  மணியளவில் இவ்வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது .  

இதன் கீழ்  மட்டக்களப்பு  மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின்  உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக  மண்முனைப்பற்று பிரதேச செயலக  செயலாளர் வி . வாசுதேவன் தலைமையில் பிரதேச செயலகத் தோட்டத்தில்  பயிர் கன்றுகள் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது .

  அதனை தொடர்ந்து கிரான்குளம்  தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளக்கட்டு கிராமத்தின்   பரமலிங்கத்தின் தோட்டத்தில் அறுவடை நிகழ்வும் அதனுடன் இணைந்ததாக விழிப்புணர்வு கருத்தரங்கும் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர் . மண்முனைப்பற்று பிரதேச செயலக  திட்டமிடல் பணிப்பாளர் , விவசாய போதானா பிரிவு உத்தியோகத்தர் ,பொருளாதார உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் வீட்டு தோட்ட பயனாளிகள்  ஆகியோர் நிகழ்வில்  கலந்துகொண்டனர் .