பாதையை விட்டு விலகி வீட்டுக்குள் புகுந்த வாகனம்

வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தெருவோரத்திலிருந்த வீட்டுக்குள் புகுந்த சம்பவம் வியாழக்கிழமை மாலை கொம்மாதுறையில் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டுக்கும் வாகனத்திற்கும் சிறிது சேதமேற்பட்டுள்ளது.
கொம்மாதுறை உமா மில் வீதியிலிருந்து சென்ற வாகனம் கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையை ஊடறுத்து நேராக வீட்டுக்குள் சென்று மோதி நின்றுள்ளது.

தெய்வாதீனமாக காயங்களோ உயிரிழப்புக்களோ ஏற்பட்டிருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.