பிரசாந்தனை மூன்று தினங்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் எதிர்வரும் திங்கட்கிழமை வரை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதியளித்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


2008 ஆம் ஆண்டின் டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பிரசாந்தன் காத்தான்குடி பொலிஸாரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது, இவரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக்காவில் வைக்க நீதவான் அனுமதி வழங்கியதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

சந்தேகநபரை மூன்று நாட்களுக்குத் தடுத்துவைத்து விசாரிக்க அனுமதியளிக்குமாறு பொலிஸார் கோரிய நிலையிலேயே மட்டக்களப்பு நீதவான் அதற்கு அனுமதியளித்துள்ளார்.