(லியோன்) மட்டக்களப்பு மாவட்ட செயலக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் “ முத்தான வியர்வை “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி ஊடாக பயன்பெறும் பயனாளிகளின் சுயதொழில் உற்பத்தி திறன்களை அதிகரிக்கும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் சுயதொழில் உற்பத்திகளின் விற்பனையும் வர்த்தக கண்காட்சியும் இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற நிகழ்வில் சுயதொழில் உற்பத்திகளான கால்நடை உற்பத்திகள் , வீட்டுத்தோட்டம் , உலர் உணவு பொருட்கள் , தைத்த ஆடைகள் , மண்பாண்டம் , மற்றும் பனையோலைகளின் உற்பத்தி பொருட்கள் போன்ற பல்வேறு பட்ட சுயதொழி உற்பத்தி பொருட்கள் இங்கு காட்சி படுத்தப்பட்டதோடு விற்பனை செய்யப்பட்டது. இதேவேளை இங்கு வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி . தவராசா மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்கள அதிகாரிகள் , வாழ்வின் எழுச்சி வலய வங்கி உத்தியோகத்தர்கள் ,வாழ்வின் எழுச்சி வங்கி பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .