. ( லியோன் ) மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் அர்ப்பண ஆண்டு நிறைவினை கொண்டாடும் முகமாக அனைத்து மறைக்கோட்ட பங்குகளிலும் பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .
இக்கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டார் .இவருடன் இணைந்து அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் மற்றும் மறைக்கோட்ட பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர் .
இக்கண்காட்சியில் கத்தோலிக்க திருச்சபையினால் புனிதர்களாக திருநிலைப்படுத்தப்பட்ட அனைத்து புனிதர்களின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் வகையில் புகைப்படங்கள் .ஓவியங்கள் , வாசகங்கள் மற்றும் உருவச்சிலைகளும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன .
இக் கண்காட்சியினை மட்டக்களப்பு மறைக்கோட்ட பங்கு அருட்தந்தையர்கள் , மறைக்கோட்ட பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள்
இணைந்து நடத்தியமை குறிப்பிடத்தக்கது .