கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இரத்ததானமுகாம்

கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.


மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இந்த நிகழ்வு காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் 1.00மணி வரை நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பெருமளவான மாணவர்கள்,பொதுமக்கள் இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் சமூக செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் தலைவர் இ.லவநீதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறை தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்த நிகழ்வினை நடாத்த ஏற்பாடுசெய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு பல்லைக்கழகத்தின் தமிழ் சங்கத்தின் சமூக சேவை திட்டத்தின் கீழ் தமிழ் பேசும் மக்கள் வாழும் அனைத்துப்பகுதிகளிலும் தமது சங்கம் ஊடாக பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தமிழ் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.