எழுத்தறிவும் உறுதிமிக்க சமுதாயமும் எனும் தொணிப்பொருளில் சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் எழுத்தறிவு சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை (10-09-2015) 09 மணியளவில் அதிபர் ஆர்.பி.விமல்ராஜ் தலைமையில் கார்ட்மன் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமதி நளினா சிறிதரன் ஆசிரியை எழுத்தறிவு தினத்தின் முக்கியத்துவத்தையும், நூலகப் பயன்பாட்டில் எழுத்தறிவுத் தன்மையின் முக்கியத்துவத்தை ஆசிரியை திருமதி சந்திராதேவி தயாக்காந்தன் ஆகியோர்கள் தெளிவான விளக்க உரையினை நிகழ்த்தினர்.
அதிபர் ஆர்.பி.விமல்ராஜ் அவர்கள் இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் தலைமை தாங்கி தலைமையுரையாற்றும் போது பின்வருமாறு தெரிவித்தார்.
“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” இறைவனுக்கு அடுத்த படியாக எழுத்தை பழக்குபவர் ஆசிரியர் ஆவார் எழுத்தறிவும், வாசிப்பும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டிய புலமைச் சிறப்பாகும்.
எழுத்தை அறிந்து கொள்ளும் போது நாம் எமது மதம் மொழி, கலை, கலாச்சார ஒழுக்க விழுமியங்களை அறிந்து கொள்ளலாம். முன்னைய காலத்தை விட நவீன காலத்தில் எழுத்தறிவு ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருப்பதனால் தங்களின் எழுத்தறிவுத் தன்மையை வினைத்திறன் மிக்கதாக மாற்ற முடியும். இதனால் சமூகத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை,மொழிப் பிரச்சனை ஏற்படாது. இதனால் எம்மிடையே எழுத்தறிவின் முக்கியத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உருவாகும்.
எனவே பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊக்கப்படுத்தி எழுத்தறிவுள்ள, வாசிப்புள்ள புலமையாளர்களை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
இதன் போது எழுத்தறிவு முக்கியத்துவம் பொறிக்கப்பட்ட இலட்சினை மாணவர்களுக்கு அதிபர் ஆசிரியர்களால் சூட்டப்பட்டுள்ளன.
இதன் போது பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருமதி நளினா சிறிதரன் ஆசிரியை எழுத்தறிவு தினத்தின் முக்கியத்துவத்தையும், நூலகப் பயன்பாட்டில் எழுத்தறிவுத் தன்மையின் முக்கியத்துவத்தை ஆசிரியை திருமதி சந்திராதேவி தயாக்காந்தன் ஆகியோர்கள் தெளிவான விளக்க உரையினை நிகழ்த்தினர்.
அதிபர் ஆர்.பி.விமல்ராஜ் அவர்கள் இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் தலைமை தாங்கி தலைமையுரையாற்றும் போது பின்வருமாறு தெரிவித்தார்.
“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” இறைவனுக்கு அடுத்த படியாக எழுத்தை பழக்குபவர் ஆசிரியர் ஆவார் எழுத்தறிவும், வாசிப்பும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் இருக்க வேண்டிய புலமைச் சிறப்பாகும்.
எழுத்தை அறிந்து கொள்ளும் போது நாம் எமது மதம் மொழி, கலை, கலாச்சார ஒழுக்க விழுமியங்களை அறிந்து கொள்ளலாம். முன்னைய காலத்தை விட நவீன காலத்தில் எழுத்தறிவு ஒவ்வொரு பிள்ளைக்கும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருப்பதனால் தங்களின் எழுத்தறிவுத் தன்மையை வினைத்திறன் மிக்கதாக மாற்ற முடியும். இதனால் சமூகத்தில் எழுத்தறிவுப் பிரச்சினை,மொழிப் பிரச்சனை ஏற்படாது. இதனால் எம்மிடையே எழுத்தறிவின் முக்கியத்துவம் தெளிவாக விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உருவாகும்.
எனவே பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஊக்கப்படுத்தி எழுத்தறிவுள்ள, வாசிப்புள்ள புலமையாளர்களை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.
இதன் போது எழுத்தறிவு முக்கியத்துவம் பொறிக்கப்பட்ட இலட்சினை மாணவர்களுக்கு அதிபர் ஆசிரியர்களால் சூட்டப்பட்டுள்ளன.