கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் கண்டி மறைமாவட்ட கரித்தாஸ் செட்டிக் அமைப்பும் மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகட் அமைப்பும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இந்த இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.
இனங்களிடையே மதங்களிடையே இன ஐக்கியத்தினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது ஆண்டாக இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகட் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜெரோன் டி லிடிமா தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இந்த இரத்ததானமுகாமில் கண்டி மற்றும் மட்டக்களப்பில் வாழும் மூன்று மதங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்வருகின்றது.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இந்த இரத்ததான முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.
இனங்களிடையே மதங்களிடையே இன ஐக்கியத்தினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது ஆண்டாக இந்த இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டுவருகின்றது.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகட் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை ஜெரோன் டி லிடிமா தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இந்த இரத்ததானமுகாமில் கண்டி மற்றும் மட்டக்களப்பில் வாழும் மூன்று மதங்களையும் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்வருகின்றது.