“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்” என்ற தலைப்பில் கூட்டமைப்புக்கு எதிராக வெல்லாவெளியில் துண்டுப்பிரசுரம்

வெல்லாவெளி பிரதேசசபையின் புதிய கட்டிடம் நாளை திறக்கப்படவுள்ள நிலையில் அதற்கு எதிராக வெல்லாவெளி பிரதேசத்தில் துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


குறித்த பிரதேச செயலகம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த சில தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அதன் திறப்பு விழாவுக்கு செல்வதையிட்டே இந்த துண்டுப்பிரசும் வெளியிடப்பட்டுள்ளது.

“இப்படி பிழைப்பதை விட ரோட்டில் துண்டுபோட்டு பிழைக்கலாம்” என்ற தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.