மட்டக்களப்பு வலய பாடசாலைகளுக்கிடையிலான 18வது விளையாட்டு விழா

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 18 வலய மட்ட வருடாந்த விளையாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கல்லடி,சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.


இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு வலய கல்வி உற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமாரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் எம்.ரி;.எம்.நிசாம,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்; எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபா எஸ்.கிரிதரன் உட்பட வலய கல்விப்பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் அணிவகுப்பு நிகழ்வுகளும் கலைகலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன.

அத்துடன் தற்போது விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளனர்.