வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 18.04.2015 அன்று பி.ப 2.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தமிழர் கலாசாரத்தையும் பாரம்பரியத்தினையும் பிரதிபலிக்கதக்கவையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
இவ்விளையாட்டு நிகழ்வின் முதலாவது அங்கமாக மரதன் ஓட்டம் காலை 6.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதான நுழைவாயிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டு மல்வத்தை வரை சென்று மீண்டும் மைதான நுழைவாயிலை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து பி.ப 2.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிதிகளை வரவேற்றல், கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல் மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

















