ஊடகவியலாளர்கள் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற நெருப்பாற்று நிலைமையின் கீழ் ஊடகவியலாளர் மாமனிதர் சிவராம் தனது ஊடகப்பணியை மேற்கொண்டுவந்ததாக வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜ் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் முதன்முறையாக அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் உள்ள ஊடக அமைப்புகள்,இலங்கை சுதந்திர ஊடக இயக்கம்,ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருள் சஞ்ஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜ்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன்,லேக் ஹவுஸ் ஆசிரிய பீட பணிப்பாளர் சமன் வராச்சி,கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி.ரகுராம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்பத்தில் மாமனிதர் சிவராமின் உருவப்படத்துக் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழ் சமூகத்தில் ஊடகக்கல்வி வாய்ப்புகளும் சவால்களும் என்னும் தலைப்பில் நினைவுப்பேருரை நிகழ்த்தப்பட்டது.
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் முதன்முறையாக அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கில் உள்ள ஊடக அமைப்புகள்,இலங்கை சுதந்திர ஊடக இயக்கம்,ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருள் சஞ்ஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜ்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன்,லேக் ஹவுஸ் ஆசிரிய பீட பணிப்பாளர் சமன் வராச்சி,கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி.ரகுராம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்பத்தில் மாமனிதர் சிவராமின் உருவப்படத்துக் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தமிழ் சமூகத்தில் ஊடகக்கல்வி வாய்ப்புகளும் சவால்களும் என்னும் தலைப்பில் நினைவுப்பேருரை நிகழ்த்தப்பட்டது.