கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,ஓந்தாச்சிமடம் அருள்மிகு சிவசக்தி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் நேற்று நடைபெற்ற மாசிமக தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெற்றது.
சிவலிங்கத்தினை மூலமூர்த்தியாக கொண்ட இந்த ஆலயமானது பன்னெடுங்காலமாக மட்டக்களப்பு மாவட்ட இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக போற்றப்பட்டுவருகின்றது.
தமிழர்களின் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆலய உற்சவம் நடைபெற்றுவருகின்றது.
ஐந்து தினங்கள் மட்டுமே நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று பால் குட பவனியும் விசேட யாகபூஜையும் நடைபெற்றது.
விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சற்குணராஜா குருக்களின் தலைமையில் கிரியைகள் நடைபெற்றுவருவதுடன் சிறப்பு பூஜைகளும் நடாத்தப்பட்டுவருகின்றன.
நேற்று ஓந்தாச்சிமடம் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அடியார்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.
பிரதான வீதியுடாக வந்து ஐம்பது வீட்டுத்திட்ட வீதியூடாக இந்த பால்குட பவனி நடைபெற்றதுடன் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.
சிவலிங்கத்தினை மூலமூர்த்தியாக கொண்ட இந்த ஆலயமானது பன்னெடுங்காலமாக மட்டக்களப்பு மாவட்ட இந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக போற்றப்பட்டுவருகின்றது.
தமிழர்களின் பாரம்பரியங்களையும் கலாசாரங்களையும் பிரதிபலிக்கும் வகையில் ஆலய உற்சவம் நடைபெற்றுவருகின்றது.
ஐந்து தினங்கள் மட்டுமே நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்று பால் குட பவனியும் விசேட யாகபூஜையும் நடைபெற்றது.
விஸ்வப்பிரம்ம ஸ்ரீ சற்குணராஜா குருக்களின் தலைமையில் கிரியைகள் நடைபெற்றுவருவதுடன் சிறப்பு பூஜைகளும் நடாத்தப்பட்டுவருகின்றன.
நேற்று ஓந்தாச்சிமடம் ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அடியார்கள் பால்குடம் எடுத்துவரும் நிகழ்வு நடைபெற்றது.
பிரதான வீதியுடாக வந்து ஐம்பது வீட்டுத்திட்ட வீதியூடாக இந்த பால்குட பவனி நடைபெற்றதுடன் பெருமளவான அடியார்களும் கலந்துகொண்டனர்.