மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான தேர்வில் தோற்றியும்; ஆசிரியர்களாக உள்வாங்க்கப்படாதவர்களை நாளை சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை 9.00மணியளவில் அனைவரையும் சமூகம் தருமாறு மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐயமுத்து ரவிச்சந்திரன்,
2007ஆம் ஆண்டு தேர்வில் தோற்றியபோதிலும் நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை கடந்த காலத்தில் அரசாங்கங்களின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் தற்போது அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் யாரும் வெளிப்படுத்தாத நிலையில் அவற்றினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கமான 0779583802 என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளமர்றும் கோரப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை காலை 9.00மணியளவில் அனைவரையும் சமூகம் தருமாறு மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஐயமுத்து ரவிச்சந்திரன்,
2007ஆம் ஆண்டு தேர்வில் தோற்றியபோதிலும் நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை கடந்த காலத்தில் அரசாங்கங்களின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதிய அரசாங்கம் பதவியேற்ற நிலையில் தற்போது அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் யாரும் வெளிப்படுத்தாத நிலையில் அவற்றினை வெளிப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ள தொலைபேசி இலக்கமான 0779583802 என்னும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளமர்றும் கோரப்பட்டுள்ளது.