மண்முனை மேற்கு (வவுணதீவு)கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை மேற்கு (வவுணதீவு)கல்வி கோட்டத்திற்குட்பட்ட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வில் நாவற்காடு நாமகள் வித்தியாலயம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.


மண்முனை மேற்கு (வவுணதீவு)கல்வி கோட்டத்திற்குட்பட்ட கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு நிகழ்வு இன்று காலை நாவற்காடு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மண்முனை மேற்கு (வவுணதீவு)கல்வி கோட்ட கல்வி பணிப்பாளர் த.சோசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் எஸ்.சத்தியநாதன் கலந்துகொண்டார்.

29 பாடசாலைகள் இந்த விளையாட்டுப்போட்டி நிகழ்வில் கலந்துகொண்டதுடன் முதலாம் இடத்தினை நாவற்காடு நாமகள் வித்தியாலயமும் இரண்டாம் இடத்தினை மகிழவட்டுவான் மகா வித்தியாலயமும் மூன்றாம் இடத்தினை கன்னன்குடா மகா வித்தியாலயமும் பெற்றுகொண்டது.

பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இதன்போது மாணவர்களின் கண்கவர் உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றது.