மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் மட்டக்களப்பு மாநகரசபையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்கள பணிமனையும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இதனை முன்னிட்டு கல்லடி,உப்போடை,நாவற்குடா பகுதியில் பாரிய விழிப்புணர்வு மற்றும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேளன தலைவர் வேணுவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.தவராஜா,சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் கே.நந்தகுமார்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.நைரூஸ்,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான கே.கலாராணி,ஏ.நிசாந்தினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸார் பங்குபற்றிய மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுடன் நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை அச்சுறுத்திவரும் டெங்கின் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 361பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ச்சியாக டெங்கு தாக்கம் அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் இவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார திணைக்களத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று காலை நடாத்தப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் மட்டக்களப்பு மாநகரசபையும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்கள பணிமனையும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
இதனை முன்னிட்டு கல்லடி,உப்போடை,நாவற்குடா பகுதியில் பாரிய விழிப்புணர்வு மற்றும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் ஆரம்ப நிகழ்வானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேளன தலைவர் வேணுவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு ஆணையாளர் எம்.உதயகுமார்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எஸ்.தவராஜா,சிரேஸ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் கே.நந்தகுமார்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் என்.நைரூஸ்,மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்களான கே.கலாராணி,ஏ.நிசாந்தினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸார் பங்குபற்றிய மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதுடன் நுளம்பு பெருக்கம் உள்ள பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தினை அச்சுறுத்திவரும் டெங்கின் தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 361பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் தொடர்ச்சியாக டெங்கு தாக்கம் அதிகரித்த நிலையிலேயே உள்ளது.
இந்த நிலையில் இவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார திணைக்களத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அவற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று காலை நடாத்தப்பட்டது.