100நாள் வேலைத்திட்டற்கு மேலதிகமாக மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை அதிளவில் பகிரப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பணித்துள்ளதாhகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன் முதல் கட்டமாக இன்று காலை 9.00மணியளவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சரை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து வைத்தியசாலையினை சுற்றிப்பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்தார்.
அத்துடன் வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் வைத்திய அத்தியட்சரினால் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கமும் இணைந்திருந்ததுடன் அமைச்சின் செயலாளர்கள்,உத்தியோகத்தர்களும் வருகைதந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பணித்துள்ளதாhகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று காலை சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன் முதல் கட்டமாக இன்று காலை 9.00மணியளவில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சரை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் சுகுணன் வரவேற்றார்.
அதனைத்தொடர்ந்து வைத்தியசாலையினை சுற்றிப்பார்வையிட்ட அமைச்சர் அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்தார்.
அத்துடன் வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் வைத்திய அத்தியட்சரினால் அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கமும் இணைந்திருந்ததுடன் அமைச்சின் செயலாளர்கள்,உத்தியோகத்தர்களும் வருகைதந்தனர்.