மட்டக்களப்பு மாவட்டத்தின் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் சுற்றுலா பிரயாணிகளின் நன்மை கருதியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளோர் விமான டிக்கட்டுகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் மட்டக்களப்பில் குவைத் ஏயார்வைசின் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
மத்திய கிழக்கினை தளமாக கொண்டு இயங்கும் குவைத் ஏயார் வைஸ் நிறுவனமான சகல நாடுகளுக்குமான விமான சேவையினை வழங்கிவருகின்றது.
இலங்கையில் கொழும்பில் தலைமையத்தினைக்கொண்ட இந்த நிறுவகமானது கிழக்கு பிராந்தியத்துக்கு வரும் உல்லாசப்பிரயாணிகளின் நன்மை கருதி இந்த அலுவலகத்தினை மௌலான ரவல்ஸ் ஊடாக திறந்துள்ளது.
இதன் திறப்பு விழா மௌலான ரவல்ஸின் தலைவர் ஷெயிட் ஹமீட் மௌலான தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் குவைத் ஏயார்வைசின் இலங்கைக்கான முகாமையாளர் சுரேஸ் ரூபசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரயாணிகளின் நன்மை கருதியும் கிழக்கு மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு பிரயாணிகளின் நன்மை கருதியும் இந்த விமான சேவை கிளை திறந்துவைக்கப்பட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து உம்ரா மற்றும் மக்காவுக்கு பயணங்களை மேற்கொள்வோர் இதுவரையில் கொழும்புக்கு சென்றே தமது பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
எனினும் குவைத் ஏயார்வைசின் அலுவலகம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளதால் உம்ரா மற்றும் மக்காவுக்கு யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்த கிளை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமான பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதுடன் சுற்றுலா செல்வதற்குமான ஏற்பாடுகளையும் இந்த கிளை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மௌலான ரவல்ஸின் தலைவர் ஷெயிட் ஹமீட் மௌலான தெரிவித்தார்.
மத்திய கிழக்கினை தளமாக கொண்டு இயங்கும் குவைத் ஏயார் வைஸ் நிறுவனமான சகல நாடுகளுக்குமான விமான சேவையினை வழங்கிவருகின்றது.
இலங்கையில் கொழும்பில் தலைமையத்தினைக்கொண்ட இந்த நிறுவகமானது கிழக்கு பிராந்தியத்துக்கு வரும் உல்லாசப்பிரயாணிகளின் நன்மை கருதி இந்த அலுவலகத்தினை மௌலான ரவல்ஸ் ஊடாக திறந்துள்ளது.
இதன் திறப்பு விழா மௌலான ரவல்ஸின் தலைவர் ஷெயிட் ஹமீட் மௌலான தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் குவைத் ஏயார்வைசின் இலங்கைக்கான முகாமையாளர் சுரேஸ் ரூபசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரயாணிகளின் நன்மை கருதியும் கிழக்கு மாகாணத்திற்கு வரும் வெளிநாட்டு பிரயாணிகளின் நன்மை கருதியும் இந்த விமான சேவை கிளை திறந்துவைக்கப்பட்டது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து உம்ரா மற்றும் மக்காவுக்கு பயணங்களை மேற்கொள்வோர் இதுவரையில் கொழும்புக்கு சென்றே தமது பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுவந்தனர்.
எனினும் குவைத் ஏயார்வைசின் அலுவலகம் மட்டக்களப்பில் திறக்கப்பட்டுள்ளதால் உம்ரா மற்றும் மக்காவுக்கு யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்த கிளை ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமான பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதுடன் சுற்றுலா செல்வதற்குமான ஏற்பாடுகளையும் இந்த கிளை மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மௌலான ரவல்ஸின் தலைவர் ஷெயிட் ஹமீட் மௌலான தெரிவித்தார்.