மட்டக்களப்பு திரேசா பெண்கள் பாடசாலையில் நீர்ப்பாவை சிலை திறப்பும்,விளையாட்டு நிகழ்வும்

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்டக்களப்பு திரேசா பெண்கள் பாடசாலையில் நீர் பாவை சிலை திறப்பு விழாவும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டியும் சிறப்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


பாடசாலையின் அதிபர் திருமதிமாலதி பேரின்பநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

தமிழர்களின் கலை கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாவை சிலை இங்கு அதிதிகளால் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் உதவி உடற்கல்வி பணிப்பாளர் வி.லவகுமார்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகள் அழைத்துவரப்பட்டதுடன் மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்றதுடன் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த மெய்வல்லுனர் போட்டியில் இந்த ஆண்டுக்கான சம்பியனாக மரிய அசுந்தா இல்லம் முதலிடத்தினைப்பெற்றுகொண்டதுடன் மரிய கொரட்டி அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.