செலான் வங்கியின் செலான் பெஹசர நூலக செயற்திட்டத்தின் கீழ் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் 53வது நூலக கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி பி.நிரேஞ்ஞன் பிரதம அதிதியாகவும், செலான் வங்கியின் கல்முனைக் கிளை முகாமையாளர் திருமதி ஐ.பிரேமனி மோகன்ராஜ் மற்றும் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதிகளாகவும்,கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பி.ஜெகநாதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் ஏனைய பாடசாலையின் அதிபர்கள், மதகுருமார்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தர்.
நூலக கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஒரு இலட்சம் பெறுமதியான புத்தகங்களும் தளபாடங்களும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களினது கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் கலாநிதி பி.நிரேஞ்ஞன் பிரதம அதிதியாகவும், செலான் வங்கியின் கல்முனைக் கிளை முகாமையாளர் திருமதி ஐ.பிரேமனி மோகன்ராஜ் மற்றும் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கௌரவ அதிதிகளாகவும்,கல்முனை தமிழ் பிரிவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பி.ஜெகநாதன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் ஏனைய பாடசாலையின் அதிபர்கள், மதகுருமார்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தர்.
நூலக கற்றல் வள நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஒரு இலட்சம் பெறுமதியான புத்தகங்களும் தளபாடங்களும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களினது கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.