இவ் சான்றிதழ் வழங்கும் வைபவம் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷர் சேகுதாவுத் தலைமையில் அண்மையில், பத்தரமுல்லையிலுள்ள செத்சிரிபாய கட்டிட பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் .அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
தேசிய உற்பத்திதிறன் செயலகத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் முதல் தடவையாக பங்குபற்றியதுடன் பங்குபற்றிய முதல் வருடத்திலேயே இவ் விசேட திறமைக்கான சான்றிதழினை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.



