வாழ்வின் எழுச்சி திவிநெகும 2014 திட்டத்தின் கீழ் செழிப்பான இல்லம் என்னும் திட்டத்தின் திவிநெகும பயனாளிகளின் வீடுகளை புனரமைப்பதற்கான முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவுசெய்யப்பட்ட 8560 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு இருதயபுரம் இருதயநாதர் ஒன்றுகூடல் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட திவிநெகு திணைக்களத்தின் பணிப்பாளர் குணரெட்னம் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் மனோகிரதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முதல் கட்டமாக 150பேருக்கான கொடுப்பனவுகள் அதிதிகளினால் வழங்கப்பட்டது.
நாளை காலை 09.00 மணிக்கும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லடி ,புளியந்தீவு ஆகிய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகளில் திவிநெகும உதவி பெரும் பயனாளிகளுக்கு வழங்கப்படவிருக்கின்றது.
இந்நிகழ்வு மண்முனை வடக்கு அபிவிருத்தி குழு தலைவரும் ,கிழக்கு மாகான சபை உறுப்பினரும் , ஜனாதிபதி ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் வழங்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .