புளியந்தீவு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய சந்தியில் வீதி விபத்து…

மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய சந்தியில் இன்று காலை  மோட்டார்சைக்கிள் மீது கார் மோதுண்டு பின்னர் கடையொன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. வைத்திய பெண்மணி ஒருவர் செலுத்தி வந்த காரே ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலங்களில் இச்சந்தியில் பாரிய விபத்துக்களின் அபாயம் இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.