மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் பாலர்பாடசாலையின் இன்றைய தினம் (02) வாணிவிழா பூசைகள் கதிரவன் கலைக்கழகத்தின் கதிரவன் பாலர் பாடசாலையில் கலைக்கழகத்தின் தலைவர் இன்பன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அதிதியாகக் கலந்து கொண்டதுன் பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பூசை புனகாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வினை அடுத்து பாராளுமன்ற உறுப்பினரினால் சிறுவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.