அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறார்களின் சிறுவர் ,ஆசிரியர் ,பெற்றார் தின நிகழ்வுகள்

(லியோன்) 

மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர் பாடசாலை சிறார்களின்  சிறுவர் ,ஆசிரியர் ,பெற்றார் தின நிகழ்வுகள் அதிபர் திருமதி .பிரதீபா தர்சன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஆயர் இல்லம் குரு முதல்வர் ,அருட்பணி. ஏப்.எக்ஸ் .டயஸ் ,மட்டக்களப்பு மாமாங்கம் இலங்கை வங்கி கிளை முகாமையாளர் திருமதி .அபிராமி சிவபிருந்தன்  ஆகியோர் அதிதிகளாக கலந்துக்கொண்டனர் .

ஆரம்ப நிகழ்வாக ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வுகள் இடம்பெற்றது ,அதனை தொடர்ந்து அதிதிகள் அழைத்துவரப்பட்டு  மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் கலை நிகழ்வுகள்  இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து சிறார்களுக்கு அதிதிகளினால் பரிசு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் ,சிறுவர் ஆசிரியர் ,பெற்றார் தின நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு பெற்றது .