சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் சிறுவர் தின வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் இன்று மாலை 03.00 மணியளவில் வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்காவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக சிறுவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.இன்று இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்ச்சிகள் அனைத்தும் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் வழிகாட்டலுக்கு அமைவாக இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் தமது திறமைகளை சிறப்பாக வெளிபடுத்தி நிகழ்வுனை சிறப்பாக இடம்பெற செய்தனர் அத்தோடு நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய அனைவருக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.