மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுணதீவு-ஆயித்தியமலை வீதியில் உள்ள பாலக்காட்டின் வயல்வெளி பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது மோட்டர் சைக்கிளை செலுத்திச்சென்ற ஈச்சந்தீவை சேர்ந்த 32வயதுடைய சுந்தரகுமார் என்பவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டியை செலுத்திவந்தவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணைனையை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.