இவ் விபத்தில் மாவனெல்லை உயன்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் யூசுப், மொஹமட் பாரூக், பாத்திமா மிசிரியா என ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள உறவினர் வீடு ஒன்றிக்கு சென்று வீட திரும்பும் வழியில் அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி நித்திரைக்குள்ளாகி இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழநதவர்களின் சடலங்கள் தற்போது கட்டுகஸ்தோட்டை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.