எல்லை வீதி குழந்தையேசு செபக்கூட வருடாந்த திருவிழா

(விட்னி ராஜ்)

மட்டக்களப்பு எல்லை வீதி குழந்தையேசு செபக்கூட வருடாந்த திருவிழா நேற்று கூட்டுத்திருப்பலியுடன் சிறப்பாக நிறைவுபெற்றது.


ஆலயத்தின் வருடாந்த திருவிழா வெள்ளிக்கிழமை மாலை பங்குத்தந்தை அருட்தந்தை கிளமென்ட் .வி .அன்னதாஸ் தலைமையில் திருப்பலியுடன்  ஆரம்பமானது.

ஆலயத்தில் இரண்டு தினங்கள் தினமும் மாலை 05.00 மணிக்கு திருச்செபமாலையும் ,பிராத்தனையும் அதனை தொடர்ந்து வழிபாடுகளும் இடம்பெற்றன .

சனிக்கிழமை மாலை குழந்தையேசுவின் திருச்சொரூப பவனி சிறப்பாக முறையில் ஆலயத்தினை சூழவுள்ள வீதியில் பவனியாக கொண்டு வரப்பட்டு இறுதியில் நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  இறுதி திருவிழா கூட்டுத்திருப்பலியை திருப்பலி அருட்தந்தை. எக்ஸ் .ஐ .ரஜீவன் தலைமையில் பங்குத்தந்தை  சி .வி .அன்னதாஸ் ,அருட்தந்தை   ஜீவராஜ் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்.

திருவிழா திருப்பலியின் நிறைவில் குழந்தையேசு திருச்சுருப ஆசீரவாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இறுதியாக அனைவருக்கும் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு திருவிழா இனிதாக நிறைவுபெற்றது.