பொலநறுவை மாவட்டத்துக்குட்பட்ட தமிழர்களின் பழமைமிகு பிரதேசமான மன்னம்பிட்டியில் அருள்பாலித்துவரும் சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 30ஆம் திகதி அலங்கார உற்சவம் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னம்பிட்டி ஆற்றில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது மன்னம்பிட்டி, தமிழ் மகா வித்தியாலய அதிபர் க. இராசநாயகம் அவர்களால் திருவிழாக் குருக்கள் சிவஸ்ரீ சுதர்சன் சர்மா அவர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.
இந்த தீர்த்த உற்சவ நிகழ்வில் பொலநறுவை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் லெவிதன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.