புதிய மறைமாவட்டமாக உதயமாகி இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு விசேட நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்டம் புதிய மறைமாவட்டமாக உதயமாகி இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் ஆயர் பேரருள்திரு கலாநிதி பொன்னையா ஜோசப் தலைமையில் ஆராதனை நடைபெற்றது.

மறைமாவட்டத்தின் அம்பாறை –மட்டக்களப்பு மாவட்டங்களின் திருக்கோவில் முதல் வாகரை வரையுள்ள பங்குத் தேவாலயங்களின் பங்குத்தந்தைகள், இறைமக்கள், அருட் சகோதரிகள். எனப்பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு பேராலயத்தில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா ஆண்டகை அவர்கள் ஒப்புக் கொடுத்தார்.

இதில், குரு முதல்வர் எப்.எக்ஸ் டயஸ், அருட்தந்தைகளான அம்புறோஸ், போல் சற்குணநாயகம், ஜே.எஸ்.மொறாயஸ் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.

மறைக்கல்வி நடு நிலையத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ்வருடத்துக்கான இந் நிகழ்வில், அருட்தந்தைகளான எஸ்.யூலியன், கிறைட்டன் அவுட்ஸ்கோஸ், எகெட் கரித்தாஸ் நிறுவக ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்பட்டதையடுத்து மட்டக்களப்பு சார்ளஸ் மண்டபத்தில் மறைமாவட்டத்தின் இரண்டாவது பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக ஆயர், குரு முதல்வர் அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகளால் கேக் வெட்டி மகிழப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்டம் 2012ஆம் ஆண்டு யூலை மாதம் 03ஆம்திகதி புதிய மறைமாவட்டமாக பாப்பரசரால் பிரகடனப்படுத்தப்பட்டிது. அதற்கு முன்னர் மட்டக்களப்பு திருமலை மறைமாவட்டங்கள் இரண்டும் ஒன்றாகவே செயற்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.