உயர்தர மாணவர்களுக்கான இலவச தமிழ் மொழி கருத்தரங்கு

இவ்வருடம் க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச தமிழ்மொழி கருத்தரங்கு நேற்று காலை மட்டக்களப்பு ஒக்ஸ்போட் கல்லுரியின் நிர்வாக இயக்குனர் மகேந்திரன் நீலவண்ணன் அவர்கள் தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அவர்கள் கலந்து கொண்டார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இவ்வருடம் தோற்றும் கலைப்பிரிவு தமிழ்மொழி மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது. இதன் போது பிரபல தமிழ் ஆசிரியரான விக்னேஸ்வரன் அவர்கள் விரிவுரை நிகழ்த்தினார்.

இதன் போது  கலைப்பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.