(லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் பேராலய ஆடி அமாவாசை மஹோற்ஸவம் 17.07.2014 வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு சுபவேளையில் கொடியேற்றப்பட்டு ,வருடாந்த ஆலய ஆடி அமாவாசை திருவிழா ஆரம்பமாகிறது .
கொடியேற்றத்துடன் தொடர்ந்து மஹோற்ஸவ காலங்களில் தினமும் முற்பகல் 10.00 மணிக்கு ஆலயத்தில் விஷேட பூஜைகள் இடம்பெற்று சுவாமி உள்வீதி வருவார் .அதனை தொடர்ந்து தினமும் இரவு 07..0 மணிக்கு மூலவர் பூஜை ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்று சுவாமி உள்வீதி ,வெளிவீதி வருவார்.
மஹோற்ஸவ காலங்களை தொடர்ந்து ஆடி அமாவாசை தீர்த்தோற்ஸவம் 26.07.2014 சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் புண்ணிய தீர்த்தத்தில் தீர்த்தோற்ஸவம் நடைபெறும்.
அன்றைய தினம் மாலை 06.00 மணிக்கு மூலஸ்தான பூஜையைத் தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று ஆலய திருவிழா இனிதே நிறைவு பெரும்.
வருடாந்த உற்சவம் தொடர்பில் ஆராய புதிதாக தெரிவு செய்யப்பட ஆலய வண்ணக்கரின் முதல் நிருவாக சபை பொது கூட்டம் இன்று 29.06.2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 04.00 மணிக்கு ஆலய முன்றிலில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் அனைத்து நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .