மாவட்ட விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சி நெறி

(சுஜி)

மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று மாவட்ட விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டம் பற்றிய ஒருநாள் பயிற்சிப் பட்டறை மாவட்ட விவசாயப் பயிற்சித் நிலையத்தின் உதவிப் பண்ணை முகாமையாளர் நி~hந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பண்ணை முகாமையாளர் சுகுந்ததாஸன், விவசாய உத்தியோகஸ்தர் செல்வி எம். சிவஞானம், விவசாயப் போதனாசிரியர் பார்த்தீபன், பாடவிதான உத்தியோகஸ்தர் சலீம் ஆகியோருடன் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது விவசாயிகளுக்கு வீட்டுத் தோட்டம் பற்றிய அறிமுகம் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம் வீட்டுத் தோட்டத்தினால் ஏற்படும் நன்மைகள், வீட்டுத்தோட்டம் எவ்வாறு அமைத்தல் எவ்வாறு பராமரித்தல் போன்றன பற்றிய பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் அதன் செயன்முறைகள் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

அத்துடன் விவசாயிகளுக்கு பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பயிர்ச்செய்கைகள் காண்பிக்கப்பட்டு அது தொடர்பாகவும் பயிர்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.