(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
தாதிப் பயிற்சி முடித்த 31 பேருக்கும் முதலுதவிப்பயிற்சி முடித்த 15 பேருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனையில் இடம் பெற்றது.
சென்.ஜுட் தாதியர் சர்வதேச பயிற்சிக் கல்லூரியின் கல்முனைப் பிராந்திய நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வருடாந்த நிகழ்வும் முதலுதவி போதனாசிரியர்களுக்கும் தாதிகளுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யுனிசெப் நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் நிபால் அதாவுதீன் கலந்து கொண்டதுடன். தொழிற்பயிற்சி அதிகார சபையின் உதவி பணிப்பாளர் ரீ.வினோதராஜா , சென்.ஜுட் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் தலைவர் அப்துல் வாஹிட்,பிராந்திய முகாமையாளர் சப்ராஸ் மன்சூர் . பயிற்சி முகாமையாளர் எம்.எம்.அஹமட் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சி போதனாசிரியர்களான ஜே.சுரேஸ் ரூபன் , எம்.எம்.எம்.ஜஸீர் , அட்டாளைச் சேனை கல்வியல் கல்லூரி உப பீடாதிபதியும் சென்.ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் படையின் கிழக்கு மாகாண ஆணையாளருமான எம்.ஐ.மன்சூர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பயிறசி பெற்ற பெறும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.