உயர்தர பரீட்சையில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை

உயர்தர பரீட்சையில் புனித மைக்கேல் கல்லூரி மாணவன் சாதனை
கா.பொ.த.உயர்தர பரீட்சையில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார்.
மட்டக்களப் புனித மைக்கேல் கல்லூரி மாணவனான குழந்தைவடிவேல் சரண் என்ற மாணவனே மாவட்டத்தில் முதல் நிலைபெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் கா.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் எட்டு ஏ சித்திகளையும் ஒரு பி சித்தியையும் பெற்றிருந்ததுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் பத்தாவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்திருந்தார்.

இவர் வர்த்தகர் குழந்தைவடிவேல்,சுபா~pதம்பதியரின் புதல்வராவார்.
இவருக்கு பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.