மகரஜோதியினை முன்னிட்டு மாலையணியும் நிகழ்வு

(துசி)

மகரஜோதியினை முன்னிட்டு சபரிமலைக்கு யாத்திரிகர்கள் யாத்திரை செல்லும் வகையிலான ஐயப்பர் விரதம் இன்று ஆரம்பமானது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஐயப்பன் அடியார்கள் மாலை அணியும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு பார்வீதியில் உள்ள கீரிமடு சித்திவிநாயகர் ஆலயத்தில் ஐயப்பர் மாலை அணியும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

சித்திவிநாயர் ஆலய தீர்த்த யாத்திரைக்குழுவின் ஏற்பாட்டில் 21தினங்கள் விரதங்களை அனுஸ்டிக்கும் இவர்கள் எதிர்வரும் மாதம் சபரிமலைக்கு யாத்திரை செய்யவுள்ளனர்.

காயத்திரிபீடத்தினை சேர்ந்த சிவயோகச்செல்வன் சாம்பசிவம் குருக்களினால் கிரியைகள் யாவும் நடத்தப்பட்டது.

இதனையொட்டி ஆலயத்தில் மாலை பஜனைகள் விசேட பூசைகள் இடம்பெறவுள்ளன.